India
மேகமூட்டத்தில் ரேடாரால் விமானங்களைக் கண்டறிய முடியாதா? - வகையாகச் சிக்கிக்கொண்ட மோடி!
பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு பேட்டியில், “பாலகோட் விமானப்படை தாக்குதலை மேகமூட்டத்தின்போது நடத்தினால் பாகிஸ்தான் ரேடாரில் இருந்து தப்பித்துவிடலாம் என நான்தான் ஐடியா கொடுத்தேன்” எனச் சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நியூஸ் நேஷன் எனும் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, “அன்று வானிலை திடீரென மாறி மேகமூட்டத்துடன் இருந்தது. மேகமூட்டமாக இருப்பதால், திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டதால் வல்லுநர்கள் தாக்குதல் தேதியை மாற்றலாம் என்று கூறினர்.
ஆனால், மேகமூட்டமாக இருப்பதாலும், மழை பெய்வதாலும் இப்போது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் நாட்டின் ரேடாரிலிருந்து நாம் எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நான்தான் சொன்னேன். அதன்படியே பிப்ரவரி 26-ம் தேதி தாக்குதல் நடைபெற்றது” எனப் பேசியுள்ளார்.
ஆனால், ரேடாரில் மிகக்குறைந்த அலைநீளம் கொண்ட ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் மேகமூட்டத்திற்கிடையே செல்லும் விமானங்களைக் கண்டறிவதில் எந்தத் தடையும் இருக்காது என்பதுதான் உண்மை.
தான் தற்பெருமை பேசிக் கொள்வதற்காக உண்மைக்குப் புறம்பான தகவலைச் சொல்லி விமானப்படை அதிகாரிகளை மட்டம் தட்டும் விதமாகப் பேசியுள்ள பிரதமர் மோடியை எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!