India
மக்களவை தேர்தல் : தொடங்கியது 6-வது கட்ட வாக்குப்பதிவு !
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 425 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மீதுள்ள 118 தொகுதிகளுக்கு மேலும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று பீகாரில் 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மத்திய பிரேதசம் 8, உத்திரபிரதேசம் 14, மேற்கு வங்கம் 8, டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசாரும், மத்தியப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின்போது, திரிபுராவில் ஒரு தொகுதியில் முறைகேடு நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், அங்குள்ள 168 வாக்குச் சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !