India
மக்களவை தேர்தல் : தொடங்கியது 6-வது கட்ட வாக்குப்பதிவு !
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 425 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மீதுள்ள 118 தொகுதிகளுக்கு மேலும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று பீகாரில் 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மத்திய பிரேதசம் 8, உத்திரபிரதேசம் 14, மேற்கு வங்கம் 8, டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசாரும், மத்தியப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின்போது, திரிபுராவில் ஒரு தொகுதியில் முறைகேடு நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், அங்குள்ள 168 வாக்குச் சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!