India
அசாமின் ஹைலகண்டிக்கு நாளை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!
அசாம் மாநிலத்தில் உள்ள ஹைலகண்டி நகரில் நேற்று (மே 10) காளிபிரி என்ற பகுதியில் ஒரு தரப்பு, பள்ளிவாசல் முன்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை எதிர்த்து மற்றொரு பிரிவு மறியலில் ஈடுபட்டது.
இதனையடுத்து, இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த மோதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூவரில் ஒருவர் உயிரிழந்தார்.
இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நீடித்ததால் நேற்று மாலை 6 மணியில் இருந்து நாளை (மே12) இரவு 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஹைலகண்டி காவல்துறை துணை ஆணையர் கீர்த்தி, வன்முறை ஏற்பட்டதன் காரணமாக இன்னும் பதற்றம் தனியாததால், ராணுவ பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், மோதல் போக்கில் ஈடுபட்டவர்கள் எவரை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!