India
தூக்கம் இல்லாமல் தவிப்பதால் மோடிக்கு மனநிலை பாதிப்பு - சத்தீஸ்கர் முதல்வர்
தூக்கமின்மை காரணமாக பிரதமர் மோடியின் மனநிலை சீராக இல்லாததால் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 5) அன்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நம்பர் ஒன் ஊழல்வாதி என்றும், அவர் காங்கிரஸாரால் மிஸ்டர் க்ளீன் என சித்தரிக்கப்பட்டவர் என்றும் விமர்த்திருந்தார்.
மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும் என்பதை அறிந்து, மன அமைதியின்றி இருக்கிறார் மோடி.
அதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த ராஜீவ் காந்தி பற்றி, அதுவும் தேர்தல் சமயத்தில் மோடி பேசி இருக்கிறார்.
மேலும், நாள்தோறும் தான் 3 அல்லது 4 மணிநேரம் மட்டுமே தூங்குவதாக மோடி கூறியிருந்தார். எனவே, தூக்கமின்மை காரணமாக அவரது மனநிலை தடுமாறியுள்ளது. மோடிக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படுகிறது என பதிலடி கொடுத்துள்ளார் பூபேஷ் பாகேல்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!