India
தூக்கம் இல்லாமல் தவிப்பதால் மோடிக்கு மனநிலை பாதிப்பு - சத்தீஸ்கர் முதல்வர்
தூக்கமின்மை காரணமாக பிரதமர் மோடியின் மனநிலை சீராக இல்லாததால் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 5) அன்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நம்பர் ஒன் ஊழல்வாதி என்றும், அவர் காங்கிரஸாரால் மிஸ்டர் க்ளீன் என சித்தரிக்கப்பட்டவர் என்றும் விமர்த்திருந்தார்.
மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும் என்பதை அறிந்து, மன அமைதியின்றி இருக்கிறார் மோடி.
அதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த ராஜீவ் காந்தி பற்றி, அதுவும் தேர்தல் சமயத்தில் மோடி பேசி இருக்கிறார்.
மேலும், நாள்தோறும் தான் 3 அல்லது 4 மணிநேரம் மட்டுமே தூங்குவதாக மோடி கூறியிருந்தார். எனவே, தூக்கமின்மை காரணமாக அவரது மனநிலை தடுமாறியுள்ளது. மோடிக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படுகிறது என பதிலடி கொடுத்துள்ளார் பூபேஷ் பாகேல்.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!