India
தூக்கம் இல்லாமல் தவிப்பதால் மோடிக்கு மனநிலை பாதிப்பு - சத்தீஸ்கர் முதல்வர்
தூக்கமின்மை காரணமாக பிரதமர் மோடியின் மனநிலை சீராக இல்லாததால் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 5) அன்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நம்பர் ஒன் ஊழல்வாதி என்றும், அவர் காங்கிரஸாரால் மிஸ்டர் க்ளீன் என சித்தரிக்கப்பட்டவர் என்றும் விமர்த்திருந்தார்.
மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும் என்பதை அறிந்து, மன அமைதியின்றி இருக்கிறார் மோடி.
அதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த ராஜீவ் காந்தி பற்றி, அதுவும் தேர்தல் சமயத்தில் மோடி பேசி இருக்கிறார்.
மேலும், நாள்தோறும் தான் 3 அல்லது 4 மணிநேரம் மட்டுமே தூங்குவதாக மோடி கூறியிருந்தார். எனவே, தூக்கமின்மை காரணமாக அவரது மனநிலை தடுமாறியுள்ளது. மோடிக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படுகிறது என பதிலடி கொடுத்துள்ளார் பூபேஷ் பாகேல்.
Also Read
-
இனி அனுமதி இன்றி யாரையும் கைது செய்ய முடியாது : அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம் !
-
இது வெறும் டிரெய்லர்தான்... இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி - ஒன்றிய அரசை கதி கலங்க வைத்த கபில் சிபல் !
-
இஸ்லாமியர் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை : சர்ச்சையில் தூர்தர்ஷன் தொலைக்காச்சி : CPIM விமர்சனம் !
-
”பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது” : சரத்பவார் கடும் விமர்சனம்!
-
மியான்மர் ராணுவ புரட்சிக்கு உதவிய அதானி நிறுவனம் : நார்ஜெஸ் வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு!