India
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் ராணுவ வீரர் வழக்கு!
எல்லையில் ராணுவ வீரர்களுக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை என்றும், சுகாதாரமற்ற உணவு என குறை கூறி முகநூலில் வீடியோ வெளியிட்டதாக பாதுகாப்பு படை பணியில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு பாஜக அரசால் நீக்கப்பட்டார் தேஜ் பகதூர் யாதவ்.
இந்நிலையில், மே 19 அன்று வாரணாசியில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்திருந்தார் தேஜ் பகதூர். இறுதியில் உத்தரபிரதேச மாநிலத்தின் பிரதான கட்சியான சமாஜ்வாடி தனது வேட்பாளரை விலக்கிக்கொண்டு தேஜ் பகதூரை அக்கட்சியின் வேட்பாளராக அறிவித்தது.
இதனையடுத்து, வாரணாசியில் போட்டிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த தேஜ் பகதூரில் மனுவில் ஒழுங்கான விவரங்கள் இல்லை எனக் கூறி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.
பின்னர், பேட்டியளித்த தேஜ் பகதூர், தேர்தல் ஆணையம் திட்டமிட்டே தன்னுடைய வேட்புமனுவை நிராகரித்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். ஆகையால் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்வேன் என கூறினார்.
அதேபோல், தனது வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் வழக்கு தொடந்துள்ளார்.
Also Read
-
“நீலப்பொருளாதாரத்தில் முன்னணி மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மாநிலங்களவை தேர்தல் : வெளியானது தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல்!
-
காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ; கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
-
ரூ.42.94 கோடியில் 14 விளையாட்டுத்துறை கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!