India
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவிருக்கும் சந்திர சேகர ராவ்!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை வரும் 13-ம் தேதி சென்னையில் சந்தித்துப் பேச இருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனையும் இன்று சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், மக்களவைப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க என எந்தக் கூட்டணியிலும் இணையவில்லை. இந்நிலையில், தேர்தலுக்குப் பின்னர் அவர் வலுவான மூன்றாவது அணியை அமைக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை சந்திரசேகர ராவ், திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசவுள்ளார். வரும் 13-ம் தேதி சென்னைக்கு வந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசவிருக்கிறார் சந்திரசேகர ராவ்.
தேர்தலுக்கு முன்பே ஒருமுறை சந்திரசேகர ராவ் சென்னை வந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துச் சென்றார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு மீண்டும் அவர் தி.மு.க தலைவரைச் சந்திக்க வருவது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
Also Read
-
இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துபவர்களுக்கு தமிழ்நாடு அரசு பகிரங்க எச்சரிக்கை... - முழு விவரம் !
-
தருமபுரியில் 30 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : தமிழ்நாட்டில் தகிக்கும் கோடை வெப்பம் !
-
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் விவகாரம் : பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்த பாஜக - குவியும் கண்டனம்!
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !