India
ஆந்திராவில் பட்டினிச் சாவு : கொடும் பசியால் மண்ணைத் தின்ற குழந்தை பலி!
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மகேஷ் - நீலவாணி. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கும் நிலையில் அவரது சகோதரியின் 2 வயது குழந்தையையும் வளர்த்துள்ளனர். இந்தச் சூழலில் மகேஷ் - நீலவாணி தம்பதியர் வேலை இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வாழ்ந்துள்ளனர்.
சில நாட்களாக ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 2 வயது குழந்தை பசி தாங்காமல் மண்ணைத் தின்றுள்ளனது. இதனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதனால் செய்வது அறியாமல் திகைத்த பெற்றோர் குழந்தைகளை புதைத்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது இவர்களின் இன்னொரு குழந்தையும் கடந்தாண்டு பசியின் காரணமாக மண்ணைத் தின்று உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
பெற்றோர்களின் வறுமையும் கவனக்குறைவுமே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற குழந்தைகளை போலீசார் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் அந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் உணவு மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதற்கு ஆதார் நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!