India
மேற்கு வங்கம் நோக்கி நகரும் ஃபானி புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
ஒடிசாவில் கரையைக் கடந்துவரும் ஃபானி புயல், தற்போது மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து வருவதாக ஒடிசா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் காலை 8 மணி முதல் கரையைக் கடக்கத் துவங்கிய ஃபானி புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்கிறது. ஃபானி புயலுக்கு புவனேஸ்வரில் 3 பேர் பலியாகியுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேற்குவங்கம் நோக்கி நகரும் புயலால் காற்றின் வேகம் அதிகரிக்கும். அடுத்த 6 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை தொடரும் எனவும், மேற்குவங்க கடற்பகுதி நோக்கி புயல் நகரும்போது ஒடிசாவில் புயலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் எனவும் தெரிவித்துள்ளது ஒடிசா வானிலை ஆய்வு மையம்.
ஃபானி புயல் மேற்குவங்கம் நோக்கி நகர்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உயரதிகாரிகளுடன் மம்தா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டது.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!