India
மேற்கு வங்கம் நோக்கி நகரும் ஃபானி புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
ஒடிசாவில் கரையைக் கடந்துவரும் ஃபானி புயல், தற்போது மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து வருவதாக ஒடிசா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் காலை 8 மணி முதல் கரையைக் கடக்கத் துவங்கிய ஃபானி புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்கிறது. ஃபானி புயலுக்கு புவனேஸ்வரில் 3 பேர் பலியாகியுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேற்குவங்கம் நோக்கி நகரும் புயலால் காற்றின் வேகம் அதிகரிக்கும். அடுத்த 6 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை தொடரும் எனவும், மேற்குவங்க கடற்பகுதி நோக்கி புயல் நகரும்போது ஒடிசாவில் புயலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் எனவும் தெரிவித்துள்ளது ஒடிசா வானிலை ஆய்வு மையம்.
ஃபானி புயல் மேற்குவங்கம் நோக்கி நகர்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உயரதிகாரிகளுடன் மம்தா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!