India
வாக்குக்காக ராணுவத்தின் பின்னால் மோடி ஒளிந்துகொள்கிறார் - மன்மோகன் சிங் சாடல்
இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அதில் அவர் பேசியதாவது,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) ஆட்சியில் இருந்த போதும், தீவிரவாதிகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதனை ஒரு போதும், காங்கிரஸாரும், அரசும் வாக்குக்காக பயன்படுத்தியதும் இல்லை, அதனை வெளிப்படுத்திக்கொண்டதும் இல்லை.
ஆனால், 2016ல் நடந்த துல்லியத் தாக்குதலையும், சமீபத்தில் பாலகோட்டில் நடந்த விமானப் படை தாக்குதலையும் தற்போது பிரதமராக உள்ள மோடி தேர்தல் பிரசாரத்தின் போது பேசி வருவது வெட்கக்கேடான செயல் என மன்மோகன் சிங் சாடியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பொறுத்தவரை ராணுவ நடவடிக்கைகளை நாட்டிற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே நடத்தப்பட்டது என்றார்.
கடந்த 70 ஆண்டுகளில், ஆட்சி அதிகாரத்தில் இருந்த எந்த அரசும் ராணுவத்தின் பின்னால் ஒளிந்துகொண்டதில்லை. ஆனால், பாஜகவின் அரசு மேற்கொண்ட தவறான பொருளாதார கொள்கையை மறைப்பதற்காக இந்தியாவின் வீரமிக்க பாதுகாப்பு படைகளை தேர்தலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்திக்கொண்டு அதன் பின்னால் ஒளிந்துகொள்வது வெட்கக் கேடான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!