India
மக்களவை தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றமா?உச்சநீதிமன்றத்தில் வழக்கு
வழக்கறிஞர் மீனாட்சி அரோரா இன்று தலைமை நீதிபதி முன்பாக ஆஜராகி, வரும் 6 ஆம் தேதி முதல் ரம்சான் நோன்பு காலம் தொடங்க உள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்துக்கு கடும் வெப்பம் நிலவும் என்று வானிலை மையம் எச்சரித்திருப்பதையும் கருத்தில் கொண்டு வாக்குபதிவு நேரத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
காலை 7 மணிக்குப் பதிலாக இரண்டு மணி நேரம் முன்னதாக காலை 5 அல்லது 5.30 மணிக்கு தொடங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு ஏழு மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!