India
“பா.ஜ.கவின் வாக்கு வங்கியை குறிவைத்து வியூகம் அமைத்துள்ளோம்” - பிரியங்கா காந்தி
மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட தேர்தலில் 4 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறன.
இதனையடுத்து, வருகிற மே 19ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது.
அதன் பிறகு, ,மே 23 அன்று நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ள அமேதி தொகுதியில் உ.பி. காங்கிரஸ் பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ராகுல்காந்திக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த முறை ஆட்சிக்கு வந்த பா.ஜ.கவின் எண்ணம் இந்த முறை பலிக்காது என்றும், நிச்சயம் உ.பி. மாநிலத்தில் பாஜக பெரும் தோல்வியையே சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பா.ஜ.கவின் வாக்கு வங்கியை குறைக்கும் வகையில் திட்டமிட்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ”காங்கிரஸ் வலுவாக உள்ள தொகுதிகளில் வெற்றி நிச்சயம். மற்ற இடங்களில், பா.ஜ.கவின் வாக்கு வங்கியை குறைக்கும் வகையில் வியூகம் வகுத்துள்ளோம். கடந்த தேர்தல் போல் அல்லாமல், இம்முறை தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பலத்த அடியைக் கொடுக்கும்” என்றார்.
முன்னதாக, அமேதி தொகுதிக்கு பிரசாரத்துக்காக வந்த பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!