India
புல்வாமா போன்று மீண்டும் தீவிரவாத தாக்குதல்? - உளவுத்துறை எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் இந்த ஆண்டு பிப்.,14 அன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 40 வீரர்கள் பலியாகினர்.
இந்நிலையில், புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று மீண்டும் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற இருப்பதாகவும் இதனை ஐ.எஸ். மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்புகள் செயல்படுத்த இருப்பதாகவும் மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியாக இந்தியாவில், தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!