India
நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் - 3 மணிவரை 50% வாக்குப்பதிவு!
மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி சராசரியாக 50% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதுமுள்ள 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் 17, உத்தர பிரதேசத்தில் 13, ராஜஸ்தானில் 13, மேற்குவங்கத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, ஒடிசாவில் 6, பீகாரில் 5, ஜார்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதி என மொத்தம் 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
72 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் மொத்தம் 543 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 72 தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க 45 தொகுதிகளைக் கைப்பற்றியது.
ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியை இழந்து பா.ஜ.க சறுக்கலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி சராசரியாக 49.53% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 66% வாக்குகளும், குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 8.42% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
Also Read
-
ஓய்வுபெற்ற பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி… காரணம் என்ன?
-
“எதற்கு ஆளுநர் பதவி..? ராஜ்பவனின் 156 ஏக்கர் இடமாவது மிச்சமாகுமே!” : ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
-
வந்தார்.. நின்றார்.. சென்றார்.. Repeatuh.. இதுவரை எத்தனை முறை பேரவையை விட்டு Exit ஆன ஆளுநர் ரவி? -விவரம்!
-
“அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அறிக்கை வெளியிடும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலடி!
-
அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!