India
விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல் !
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரித்த மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகுவதாக தெரிவித்தார். மேலும் விசாரணை குழுவில் இருந்து விலகுவதாக நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கடிதம் அனுப்பியுள்ளார்.ரமணா தலைமை நீதிபதியின் நண்பர் என்பதால் உரிய விசாரணை நடைபெற வாய்பில்லை என்று தனது எதிர்ப்பை தெரிவித்து நேற்று அந்தப் பெண் கடிதம் எழதியதைத் தொடர்ந்து ரமணா விலகியுள்ளார்.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!