India
விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல் !
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரித்த மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகுவதாக தெரிவித்தார். மேலும் விசாரணை குழுவில் இருந்து விலகுவதாக நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கடிதம் அனுப்பியுள்ளார்.ரமணா தலைமை நீதிபதியின் நண்பர் என்பதால் உரிய விசாரணை நடைபெற வாய்பில்லை என்று தனது எதிர்ப்பை தெரிவித்து நேற்று அந்தப் பெண் கடிதம் எழதியதைத் தொடர்ந்து ரமணா விலகியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!