India
விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல் !
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரித்த மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகுவதாக தெரிவித்தார். மேலும் விசாரணை குழுவில் இருந்து விலகுவதாக நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கடிதம் அனுப்பியுள்ளார்.ரமணா தலைமை நீதிபதியின் நண்பர் என்பதால் உரிய விசாரணை நடைபெற வாய்பில்லை என்று தனது எதிர்ப்பை தெரிவித்து நேற்று அந்தப் பெண் கடிதம் எழதியதைத் தொடர்ந்து ரமணா விலகியுள்ளார்.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!