India
3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு - சராசரியாக 63% வாக்குப்பதிவு!
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டுகட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
மூன்றாவது கட்டமாக உத்தர பிரதேசம், மேற்குவங்கம், குஜராத், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
116 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 63.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 79.36% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ள ஜம்மு காஷ்மீரில் 12.86% வாக்குகளே பதிவாகியுள்ளன. ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 78% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு பின்வருமாறு :
ஒடிசா - 58.18%
திரிபுரா - 78.52%
உத்தர பிரதேசம் - 57.74%
மேற்கு வங்கம் - 79.36%
சத்தீஸ்கர் - 65.91%
தாத்ரா & நாகர் ஹவேளி - 71.43%
டாமன் & டையூ - 65.34%
அசாம் - 78.29%
பீகார் - 59.97%
கோவா - 71.09%
குஜராத் - 60.21%
ஜம்மு காஷ்மீர் - 12.86%
கர்நாடகா - 64.14%
கேரளா - 70.21%
மகாராஷ்டிரா - 56.57%
Also Read
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!
-
ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது சரியான அரசியல் முடிவு : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு!
-
"ஓ.பன்னீர்செல்வம் வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!