India
3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு - சராசரியாக 63% வாக்குப்பதிவு!
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டுகட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
மூன்றாவது கட்டமாக உத்தர பிரதேசம், மேற்குவங்கம், குஜராத், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
116 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 63.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 79.36% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ள ஜம்மு காஷ்மீரில் 12.86% வாக்குகளே பதிவாகியுள்ளன. ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 78% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு பின்வருமாறு :
ஒடிசா - 58.18%
திரிபுரா - 78.52%
உத்தர பிரதேசம் - 57.74%
மேற்கு வங்கம் - 79.36%
சத்தீஸ்கர் - 65.91%
தாத்ரா & நாகர் ஹவேளி - 71.43%
டாமன் & டையூ - 65.34%
அசாம் - 78.29%
பீகார் - 59.97%
கோவா - 71.09%
குஜராத் - 60.21%
ஜம்மு காஷ்மீர் - 12.86%
கர்நாடகா - 64.14%
கேரளா - 70.21%
மகாராஷ்டிரா - 56.57%
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!