India
3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு - சராசரியாக 63% வாக்குப்பதிவு!
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டுகட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
மூன்றாவது கட்டமாக உத்தர பிரதேசம், மேற்குவங்கம், குஜராத், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
116 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 63.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 79.36% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ள ஜம்மு காஷ்மீரில் 12.86% வாக்குகளே பதிவாகியுள்ளன. ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 78% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு பின்வருமாறு :
ஒடிசா - 58.18%
திரிபுரா - 78.52%
உத்தர பிரதேசம் - 57.74%
மேற்கு வங்கம் - 79.36%
சத்தீஸ்கர் - 65.91%
தாத்ரா & நாகர் ஹவேளி - 71.43%
டாமன் & டையூ - 65.34%
அசாம் - 78.29%
பீகார் - 59.97%
கோவா - 71.09%
குஜராத் - 60.21%
ஜம்மு காஷ்மீர் - 12.86%
கர்நாடகா - 64.14%
கேரளா - 70.21%
மகாராஷ்டிரா - 56.57%
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!