India
“அமித்ஷாவும் விரைவில் அழுவார்” - சல்மான் குர்ஷித் பதிலடி!
“2008-ல் பட்லா ஹவுஸில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் இறந்த தீவிரவாதிகளுக்காக சோனியா காந்தி கண்ணீர் வடித்தார்” எனப் பேசிய பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்.
முன்னதாக, நேற்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா, "2008-ல் பட்லா ஹவுஸில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்தச் சண்டையின்போது சில போலீஸாரும் பலியாகினர். ஆனால், போலீஸாரைப் பற்றிக் கவலைப்படாமல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்காக கண்ணீர் வடித்தவர் சோனியா" எனக் கூறியிருந்தார்.
அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சல்மான் குர்ஷித், "சோனியா கண்ணீர் சிந்துவதை நான் பார்க்கவில்லை. ஒருவேளை அமித்ஷா பார்த்தாரா என்னவோ? பாட்லா ஹவுஸ் துப்பாக்கிச் சண்டை குறித்து சோனியா காந்தி தனது உணர்வுகளை வெளிப்படுத்தியதை அமித்ஷா கண்ணீர் என்று கூறுவார் போல. அப்படியென்றால் அமித்ஷாவும் விரைவில் அழுவார்" என பதிலடி கொடுத்துள்ளார் சல்மான் குர்ஷித்.
Also Read
-
பெண்ணுரிமையை பறைசாற்றிய பாரதியாரைப் போற்றும் 'பாரதியார் இல்லம்' புதிய Instagram வலைதள பக்கம் தொடக்கம்!
-
நெல்லையில் ரூ.30 கோடியில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு... என்னென்ன வசதிகள்? - விவரம்!
-
4.29 லட்சம் வீடுகள்.. 25.56 லட்சம் பேருக்கு பட்டாக்கள்.. ஏழை மக்களின் கனவை நனவாக்கிய திராவிட மாடல்!
-
“நிதிஷ் குமாரின் கதியைப் பார்த்தாவது திருந்த வேண்டும்...” - பழனிசாமிக்கு முரசொலி தலையங்கம் அறிவுரை!
-
“கழக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த திருச்சி மாநாடு...” - வரலாற்று சுவடுகளோடு முதலமைச்சர் மடல்!