India
“அமித்ஷாவும் விரைவில் அழுவார்” - சல்மான் குர்ஷித் பதிலடி!
“2008-ல் பட்லா ஹவுஸில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் இறந்த தீவிரவாதிகளுக்காக சோனியா காந்தி கண்ணீர் வடித்தார்” எனப் பேசிய பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்.
முன்னதாக, நேற்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா, "2008-ல் பட்லா ஹவுஸில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்தச் சண்டையின்போது சில போலீஸாரும் பலியாகினர். ஆனால், போலீஸாரைப் பற்றிக் கவலைப்படாமல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்காக கண்ணீர் வடித்தவர் சோனியா" எனக் கூறியிருந்தார்.
அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சல்மான் குர்ஷித், "சோனியா கண்ணீர் சிந்துவதை நான் பார்க்கவில்லை. ஒருவேளை அமித்ஷா பார்த்தாரா என்னவோ? பாட்லா ஹவுஸ் துப்பாக்கிச் சண்டை குறித்து சோனியா காந்தி தனது உணர்வுகளை வெளிப்படுத்தியதை அமித்ஷா கண்ணீர் என்று கூறுவார் போல. அப்படியென்றால் அமித்ஷாவும் விரைவில் அழுவார்" என பதிலடி கொடுத்துள்ளார் சல்மான் குர்ஷித்.
Also Read
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!