India
ராகுல் காந்தியின் வேட்பு மனு அமேதியில் ஏற்பு!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியில் இந்த முறையும் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடுகிறார். மே 6ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த ஏப்.,20 அன்று நடைபெற்றது. அதில் ராகுல் காந்தியிம் குடியுரிமை குறித்து சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் குழப்பம் ஏற்படுத்தினர். அதனால், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் வழக்கறிஞர் அளித்த விளக்கத்தை ஏற்று அமேதி தொகுதிக்கான ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
இதற்கிடையில், அமேதி தொகுதி மட்டுமில்லாமல் கேரளாவின் வயநாடு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதற்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.,23) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!