India
ராகுல் காந்தியின் வேட்பு மனு அமேதியில் ஏற்பு!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியில் இந்த முறையும் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடுகிறார். மே 6ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த ஏப்.,20 அன்று நடைபெற்றது. அதில் ராகுல் காந்தியிம் குடியுரிமை குறித்து சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் குழப்பம் ஏற்படுத்தினர். அதனால், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் வழக்கறிஞர் அளித்த விளக்கத்தை ஏற்று அமேதி தொகுதிக்கான ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
இதற்கிடையில், அமேதி தொகுதி மட்டுமில்லாமல் கேரளாவின் வயநாடு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதற்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.,23) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!