India
ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவு நேரம் குறைப்பு !
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் என, மூன்று பிராந்தியங்களை கொண்டது. காஷ்மீரில், மூன்று தொகுதிகள், ஜம்முவில், இரண்டு; லடாக்கில் ஒரு தொகுதி. இந்தத் தொகுதிகளுக்கு, ஏப்., 11, 18, 23 29, மே 6 என, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதில், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும், மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
அனந்த்நாக் தொகுதியில் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் வன்முறை ஏற்பட்டது.
இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க அனந்த்நாக் தொகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும் என்று காவல் துறை கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, மாலை 6 மணிக்குப் பதிலாக 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குல்காம் தொகுதியில் 29-ம் தேதியும், சோபியான், புல்வாமா பகுதிகளில் அடுத்த மாதம் 6-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !