India
ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவு நேரம் குறைப்பு !
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் என, மூன்று பிராந்தியங்களை கொண்டது. காஷ்மீரில், மூன்று தொகுதிகள், ஜம்முவில், இரண்டு; லடாக்கில் ஒரு தொகுதி. இந்தத் தொகுதிகளுக்கு, ஏப்., 11, 18, 23 29, மே 6 என, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதில், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும், மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
அனந்த்நாக் தொகுதியில் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் வன்முறை ஏற்பட்டது.
இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க அனந்த்நாக் தொகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும் என்று காவல் துறை கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, மாலை 6 மணிக்குப் பதிலாக 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குல்காம் தொகுதியில் 29-ம் தேதியும், சோபியான், புல்வாமா பகுதிகளில் அடுத்த மாதம் 6-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!