India
ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவு நேரம் குறைப்பு !
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் என, மூன்று பிராந்தியங்களை கொண்டது. காஷ்மீரில், மூன்று தொகுதிகள், ஜம்முவில், இரண்டு; லடாக்கில் ஒரு தொகுதி. இந்தத் தொகுதிகளுக்கு, ஏப்., 11, 18, 23 29, மே 6 என, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதில், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும், மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
அனந்த்நாக் தொகுதியில் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் வன்முறை ஏற்பட்டது.
இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க அனந்த்நாக் தொகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும் என்று காவல் துறை கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, மாலை 6 மணிக்குப் பதிலாக 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குல்காம் தொகுதியில் 29-ம் தேதியும், சோபியான், புல்வாமா பகுதிகளில் அடுத்த மாதம் 6-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!