India
கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் நாளை ஓய்கிறது தேர்தல் பரப்புரை!
நாட்டின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் ஏப்.,11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடந்தேறியது.
இதனையடுத்து மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), உத்தர பிரதேசம் (10) , குஜராத் (26) , சத்தீஸ்கர் (7) , பீகார் (5), அசாம் (4), மகாராஷ்டிரா (14), ஒடிசா (6), மேற்கு வங்கம் (5) , ஜம்மு காஷ்மிர் (1) , கோவா (2) , தத்ரா & நகர்ஹவேலி (1), டாமன் & டையூ (1) என 14 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல், ஒடிசாவில் உள்ள 6 மக்களவைத் தொகுதியுடன் 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.
உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியோடு தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். உ.பி-யில் ராகுல் காந்தியும், கேரளாவில் பிரியங்கா காந்தியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள 115 மக்களவைத் தொகுதிகளில் 1,612 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் பரப்புரைக்கான நேரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !