India
மதப் பிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு - யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்ய 3 நாள் தடை
இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்தி, மதப் பிரிவினையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்ததாக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், அவருக்கும் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதித்து.
ஆளுங்கட்சியினர் செய்யும் தேர்தல் விதிமீறல்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நிலவி வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே போல் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு 2 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று காலை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
Also Read
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!
-
யோக்கியர் வேஷம் போடும் பழனிசாமி : அ.தி.மு.க ஆட்சி ஊழலை மீண்டும் நினைவூட்டும் முரசொலி!