India
மதப் பிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு - யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்ய 3 நாள் தடை
இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்தி, மதப் பிரிவினையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்ததாக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், அவருக்கும் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதித்து.
ஆளுங்கட்சியினர் செய்யும் தேர்தல் விதிமீறல்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நிலவி வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே போல் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு 2 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று காலை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!