DMK Government
தபால் வாக்கு: தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கும் தொகுதிகள் நிலவரம்! #TNElections2021
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளே முன்னிலையில் உள்ளன.
அதன்படி, தற்போது வந்த தகவலின் படி, கொளத்தூர், வேளச்சேரி, திருச்சி மேற்கு, செங்கல்பட்டு, சேப்பாக்கம், திருச்சுழி, காட்பாடி, பாளையங்கோட்டை, அண்ணாநகர், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், பவானிசாகர், கோபிச் செட்டிப்பாளையம், விருகம்பாக்கம், திருவண்ணாமலை, மதுரை மேற்கு, சைதாப்பேட்டை, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றன.
இதற்கிடையே சென்னை ஆயிரம் விளக்கு, விருதுநகரில் 7 தொகுதிகள், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தபால் வாக்கு எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் முறையான சமூக இடைவெளியுடன் கூடிய மேஜைகள் ஏற்படுத்தாததால் முகவர்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
Also Read
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!