DMK Government
தபால் வாக்கு: தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கும் தொகுதிகள் நிலவரம்! #TNElections2021
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளே முன்னிலையில் உள்ளன.
அதன்படி, தற்போது வந்த தகவலின் படி, கொளத்தூர், வேளச்சேரி, திருச்சி மேற்கு, செங்கல்பட்டு, சேப்பாக்கம், திருச்சுழி, காட்பாடி, பாளையங்கோட்டை, அண்ணாநகர், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், பவானிசாகர், கோபிச் செட்டிப்பாளையம், விருகம்பாக்கம், திருவண்ணாமலை, மதுரை மேற்கு, சைதாப்பேட்டை, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றன.
இதற்கிடையே சென்னை ஆயிரம் விளக்கு, விருதுநகரில் 7 தொகுதிகள், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தபால் வாக்கு எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் முறையான சமூக இடைவெளியுடன் கூடிய மேஜைகள் ஏற்படுத்தாததால் முகவர்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!