DMK Government
அதிகாரிகள் துணையோடு அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா கனஜோர்... சுற்றிவளைத்துப் பிடித்தும் நடவடிக்கை இல்லை!?
சென்னை அசோக் நகர் பகுதியில் தேர்தல் பணப்பட்டுவாடாவில் ஈடுபட முயன்ற அ.தி.மு.கவினருக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை தி.மு.கவினர் சுற்றிவளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகர் 7வது அவென்யூ பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தெருவோர உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி மற்றும் சான்றளித்தல் என்ற பெயரிலான முகாமிற்கு சில அரசு அதிகாரிகள் வந்துள்ளனர்.
அவர்களுடன் இணைந்த அ.தி.மு.கவினர், அப்பகுதி பொதுமக்களை வரவழைத்து, வாக்குக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிட்ட தொகையை கவரில் போட்டு பணப்பட்டுவாடா செய்துள்ளனர்.
இதையறிந்து அந்த விடுதிக்கு தி.மு.கவினர் சென்ற நிலையில், அ.தி.மு.கவினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்த அரசு அதிகாரிகளை சுற்றிவளைத்து பிடித்த தி.மு.கவினர், அவர்களிடம் பணப்பட்டுவாடா குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு அதிகாரிகள் மழுப்பலாக பதிலளித்த நிலையில், அசோக் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், அந்த அதிகாரிகளை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.கவினர் வலியுறுத்திய நிலையில், காவல்துறையினர் அலட்சியமாக பேசியுள்ளனர்.
இதையடுத்து, தியாகராய நகர் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் ஜெ.கருணாநிதி, வழக்கறிஞர்களுடன் வந்து காவல்துறை அதிகாரிகளை சந்தித்தார். இந்த பணப்பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க பலமுறை தொடர்புகொண்டும், தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜேந்திரனிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை என குற்றம்சாட்டினார்.
Also Read
-
“வெல்வோம் உடன்பிறப்புகளே... 2026 தேர்தல் களம் நம்மை அழைக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
”பொய் சொல்லி போராட்டம் நடத்தும் பழனிசாமி... இருப்பை காட்டிக்கொள்ள நாடகம்!”: முரசொலி விமர்சனம்!
-
இந்தியாவில் 67% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் : வெளியான அதிர்ச்சி அறிக்கை!
-
நாடாளுமன்றத்தின் அலுவல் தொடர்பிற்கு ஏன் இந்தி மொழி ஆதிக்கம்? : துரை வைகோ எம்.பி கண்டனம்!
-
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!