DMK Government
நீலகிரியில் கால்நடை துறை பேரில் வாக்குக்காக கோழி, ஆடுகளை வழங்கும் அதிமுக: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.கவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதலே, வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம், வேட்டி ,சேலை, தட்டு போன்ற பொருட்களை நீலகிரியில் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முதல் கிராமம் கிராமமாக கால்நடை துறை சார்பில் ஒவ்வொரு வீட்டிற்கு 20 கோழிக்குஞ்சுகளை இலவசமாக கால்நடைத்துறை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
குன்னூர், கோத்தகிரி, மசினகுடி, மாயார் , பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் ,தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆளும் கட்சியினரை வைத்து வீடு வீடாக சென்று, ஒரு குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீடுதோறும் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வழங்கப்பட்டு வரும் இலவச கோழிக்குஞ்சு வழங்கும் திட்டத்தை நிறுத்துமாறு நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு முபாரக் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். உடனடியாக நிறுத்தாவிட்டால் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!