DMK Government
நீலகிரியில் கால்நடை துறை பேரில் வாக்குக்காக கோழி, ஆடுகளை வழங்கும் அதிமுக: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.கவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதலே, வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம், வேட்டி ,சேலை, தட்டு போன்ற பொருட்களை நீலகிரியில் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முதல் கிராமம் கிராமமாக கால்நடை துறை சார்பில் ஒவ்வொரு வீட்டிற்கு 20 கோழிக்குஞ்சுகளை இலவசமாக கால்நடைத்துறை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
குன்னூர், கோத்தகிரி, மசினகுடி, மாயார் , பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் ,தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆளும் கட்சியினரை வைத்து வீடு வீடாக சென்று, ஒரு குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீடுதோறும் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வழங்கப்பட்டு வரும் இலவச கோழிக்குஞ்சு வழங்கும் திட்டத்தை நிறுத்துமாறு நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு முபாரக் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். உடனடியாக நிறுத்தாவிட்டால் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!