DMK Government
நீலகிரியில் தொடரும் பட்டுவாடா: அதிமுக நிர்வாகி வீட்டிலிருந்து மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள் பறிமுதல்!
நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.கவினர் தொடர்ந்து வீடு வீடாக 500 ரூபாய் பணம், ஒரு தட்டு, வேட்டி சேலை விநியோகம் செய்து வருகிறார்கள்
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்நிலையில் தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.கவினர் அமைச்சர் வேலுமணியின் உத்தரவின் பேரில் 500 ரூபாய் பணம், ஒரு தட்டு, வேட்டி சேலை ஆகியவற்றை மாவட்டம் முழுவதும் பதுக்கி வைத்துக்கொண்டு இரவு நேரங்களில் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.
உதகை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மஞ்சூர் பகுதியில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் வசந்த ராஜ் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தட்டு, வேட்டி, சேலை ஆகியவற்றை கையும் களவுமாக பிடித்த காவல்துறை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அப்போது ஆளும் கட்சி சேர்ந்த ஒன்றிய செயலாளர், தான் ஆளும் கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என அதிகாரிகள் முன்பு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே உதகை நகரிலுள்ள காந்தல் உள்ளிட்ட 36 வார்டுகளிலும் வீடு வீடாக தட்டு, வேட்டி சேலை தலா 500 ரூபாயை அ.தி.மு.கவினர் விநியோகம் செய்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!