Election 2024
”காஷ்மீரில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படாதது ஏன்?” : ப.சிதம்பரம் கேள்வி!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஷ்மீரில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படாதது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து x சமூகவலைதளத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீரை மீட்டு இந்தியாவுடன் இணைத்ததாக பாஜக கூறியது.
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதத்திற்கும் ஊடுருவலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக பாஜக தெரிவித்தது. தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஜம்மு- காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறும் பாஜக. காஷ்மீரின் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏன் வேட்பாளர்கள் நிறுத்தவில்லை? " என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன், பா.ஜ.க கூட்டணி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!