Election 2024
”காஷ்மீரில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படாதது ஏன்?” : ப.சிதம்பரம் கேள்வி!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஷ்மீரில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படாதது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து x சமூகவலைதளத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீரை மீட்டு இந்தியாவுடன் இணைத்ததாக பாஜக கூறியது.
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதத்திற்கும் ஊடுருவலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக பாஜக தெரிவித்தது. தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஜம்மு- காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறும் பாஜக. காஷ்மீரின் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏன் வேட்பாளர்கள் நிறுத்தவில்லை? " என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன், பா.ஜ.க கூட்டணி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் Black and Red தான் ; 2.0 ஸ்டார்ட்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
விவசாயிகளின் உரிமைக்கான ”அரிசி” படம் நிச்சயம் வெல்லும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டு மீனவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி: இலங்கை சென்றடைந்த இந்திய அணி! - முழு விவரம்
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!