DMK
“தி.மு.க இளைஞரணி, மகளிரணியில் புதிய நியமனங்கள்” : தலைமை கழகத்தில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு!
தி.மு.க. சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி மாநில இளைஞர் அணிச் செயலாளர் – துணைச் செயலாளர்களை லோசனைக்குழு நியமனம் செய்து தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-
தி.மு.க. சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில இளைஞர் அணிச் செயலாளர் - துணைச் செயலாளர்கள் தலைமைக் கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.
இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ். ஜோயல்,, .ரகுபதி(எ) இன்பா ஏ.என். ரகு, நா.இளையராஜா, ப. அப்துல் மாலிக், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா (எ) பிரதீப்ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோரை நியமித்து தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
தி.மு.க. சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் - பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்களை ஆலோசனைக்குழு நியமனம் செய்து தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-
மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தி.மு.க. மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சனும், மகளிரணி இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் மற்றும் துணைச் செயலாளராக பவானி ராஜேந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மகளிர் தொண்டர் அணிச் செயலாளராக நாமக்கல் ப. ராணி, மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளராக தமிழரசி ரவிக்குமார், மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்களாக சத்யா பழனிகுமார், ஜெ.ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர்களாக விஜிலா சத்யானந்த், மாலதி நாகராஜ், சுஜாதா, கே.ராணி ரவிச்சந்திரன், அமலு, எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!