DMK
"தி.மு.கவில் உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம்" - எம்.எம்.அப்துல்லா MP பேட்டி
தமிழக மீனவர் பிரச்சனைக்கு மாநிலங்களவையில் அழுத்தமாக குரல் கொடுப்பேன், திமுகவில் உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம், புதுக்கோட்டையில் புதிதாக பொறுப்பேற்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பேட்டியளித்துள்ளார்.
திமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா இன்று அவர் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் எம்எம்.அப்துல்லா கூறுகையில்:
தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் தொடர்ந்து ஒன்றிய அரசு செயல்பட்டு வருகின்றது. தமிழக மீனவர் பிரச்சனைக்கு மாநிலங்களவையில் அழுத்தமாக குரல் கொடுப்பேன். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிபவர்கள் கொரோனா காலத்தில் விசா முடிந்து வேலை இல்லாமல் அங்கேயே உள்ளனர்.
அதேபோல் நாடு திரும்பியவர்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு தீர்வு ஏற்படுத்தப்படும். மாநிலங்களவையில் கட்சி என்ன கொள்கை சார்ந்த முடிவு எடுக்கிறதோ அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். திமுகவில் உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம் என்றும் அப்துல்லா கூறினார்.
Also Read
-
NEET 2024 தேர்வு மோசடி விவகாரம் : 11 மாணவர்கள் உள்பட 24 பேர் அதிரடி கைது - பின்னணி என்ன?
-
“நான்காம் ஆண்டில் திராவிட மாடல் அரசு - சாதனை முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !