DMK
“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.!
எதிர்வரும் தேர்தல் யார் முதலமைச்சர் என்பதற்கான தேர்தல். தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் என்று அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்கவேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் நாடு சுடுகாடு ஆககூடிய நிலை ஏற்படும் என்று தி.மு.கழக பொருளாலர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் தொகுதி செம்பாக்கம் நகராட்சி பவனந்நதியார் தெரு பூங்கா அருகில் அதிமுகவை நிராகரிக்கிறோம், திமுகவை ஆட்சியில் அமரவைப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் 1வது வட்ட செயலாளர் ஜெயபிரதீப் சந்திரன் தலைமையில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.கழக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, ஆகியோர் கலந்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டனர். பின்னர் இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் அடைந்து கழக தலைவர் மு.க.ஸ்டாலின் முலமைச்சராக ஆட்சியில் அமர்ந்த உடன் உங்கள் பகுதி குறைகள் அனைத்தும் தீர்த்து வைக்கபடும் என்று உறுதி அளித்தார்.
மேலும் பேசிய டி.ஆர்.பாலு, எதிர்வரும் தேர்தலில் நாம் அனைவரும் செலுத்தும் வாக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்காக அல்ல, யார் முதலமைச்சர் என்பதற்கான வாக்கு, கடந்த 10 ஆண்டுகளாக பொது மக்களை நிராகரித்த இந்த அதிமுக அரசை பொது மக்கள் நிராகரிக்கவேண்டும். உங்கள் வாக்கு முதலமைச்சருக்கான வாக்கு என்பதை மறந்துவிட கூடாது. கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று உதயசூரியனுக்கு வாக்களிக்கவேண்டும். இதை மறக்க கூடாது. இதில் தவறு ஏற்பட்டால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் நிலைக்கு இந்த நாட்டின் நிலை மாறிவிடும் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவரும் கழக பொருளாலருமான டி.ஆர்.பாலு பேசினார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!