DMK
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 21ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 21-01-2021, வியாழக்கிழமை, மாலை 5 மணி அளவில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது, மாவட்டக் கழகச் செயலாளர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் “கழக ஆக்கப் பணிகள்” குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“வீடியோலாம் எடுக்க கூடாது...” - தேர்தல் அலுவலரை தடுத்த தஞ்சை பாஜக நிர்வாகி... அதிரடி காட்டிய போலீஸ்!
-
“நாங்கள் கொள்கையில் நீடித்து வருகிறோம்...” - CPIM மாநில செயலாளர் சண்முகம் அதிரடி!
-
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இது நடக்கும் : பா.ஜ.க அரசின் திட்டம் - ராகுல் காந்தி எச்சரிக்கை!
-
பா.ஜ.க ஆளும் அரியானாவில் 3 வயது சிறுமி வன்கொடுமை : உச்சநீதிமன்றம் தலையிட்ட பின் குற்றவாளிகள் கைது!
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!