DMK
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 21ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 21-01-2021, வியாழக்கிழமை, மாலை 5 மணி அளவில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது, மாவட்டக் கழகச் செயலாளர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் “கழக ஆக்கப் பணிகள்” குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!