DMK
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 21ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 21-01-2021, வியாழக்கிழமை, மாலை 5 மணி அளவில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது, மாவட்டக் கழகச் செயலாளர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் “கழக ஆக்கப் பணிகள்” குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!