DMK
நாளை முதல் 100 நாள் தேர்தல் பரப்புரை... அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்!
2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று அ.தி.மு.க அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி மக்களின் மேலான ஆதரவைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 100 நாட்கள் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நாளை தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கவிருக்கிறார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
100 நாள் தேர்தல் பரப்புரையை நாளை முதல் துவங்கவிருக்கும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் இன்று மரியாதை செலுத்தினார்.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!