DMK
நாளை முதல் 100 நாள் தேர்தல் பரப்புரை... அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்!
2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று அ.தி.மு.க அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி மக்களின் மேலான ஆதரவைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 100 நாட்கள் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நாளை தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கவிருக்கிறார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
100 நாள் தேர்தல் பரப்புரையை நாளை முதல் துவங்கவிருக்கும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் இன்று மரியாதை செலுத்தினார்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!