DMK
‘அண்ணா’ ‘காமராஜர்’ பெயர்களை இருட்டடிப்பு செய்வதை நிறுத்தக்கோரி மத்திய அமைச்சருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
சென்னை சர்வதேச - உள்ளூர் விமான நிலையங்களுக்கு 1989ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது சூட்டப்பட்ட ‘அண்ணா சர்வதேச விமான நிலையம்’ - ‘காமராஜர் உள்ளூர் விமான நிலையம்’ பெயர்களை இருட்டடிப்பு செய்வதை நிறுத்தி, அவர்கள் பெயருடன் அறிவிப்பு முறையாக செய்திட வலியுறுத்தி மாண்புமிகு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களுக்கு தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும் - தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு :
“சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை புரியும்போதும் அல்லது புறப்படும் போதும் தவறான முறையில் செய்யப்படும் அறிவிப்பு குறித்த விவரத்தினை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
1989ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, சென்னை உள்ளூர் விமான முனையத்தினை “காமராஜர் விமான நிலையம்” என்றும் - சென்னை பன்னாட்டு விமான நிலையத்தினை “அண்ணா சர்வதேச விமான நிலையம்” என்றும் அறிவித்தது பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
அவ்வாறு பெயர் சூட்டப்பட்ட பின்னரும், பெரும்பாலும் சென்னை விமான நிலையம் என்றும், சென்னை சர்வதேச விமான நிலையம் என்றும் தற்போதும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், சென்னை விமான நிலைய பெயர்கள் குறித்த அறிவிப்புகளை முறையாகச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நெறிமுறைக் கட்டளைகள் வழங்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!