DMK

“தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல்” - வெளியிட்டது தலைமைக் கழகம்!

ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி நடத்தப்படும் தி.மு.க முப்பெரும் விழாவில் ஆன்றோரும் சான்றோரும் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பெரியார் விருது - மா.மீனாட்சிசுந்தரம், அண்ணா விருது - அ.இராமசாமி, கலைஞர் விருது - எஸ்.என்.என். உபயதுல்லா பாவேந்தர் விருது - அ.தமிழரசி, பேராசிரியர் விருது - சுப.ராஜகோபால் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த அருந்ததியினருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும்: உச்சநீதிமன்றம்!