DMK

தி.மு.க எம்பி திருச்சி சிவா கொண்டு வந்த மசோதாவின் பயனாக திருநங்கையர் நல தேசிய கவுன்சில் உருவானது!

*திருநங்கையருக்கான தேசியக் கவுன்சிலை மத்திய அரசு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தி.மு.க மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவா, கொண்டு வந்த திருநங்கையர் உரிமை பாதுகாப்பு தனிநபர் மசோதாவைப் பின்பற்றி கடந்த ஆண்டு திருநங்கையருக்கான உரிமைப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டத்தின் படி இந்த கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலில் வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு என இந்திய மாநிலங்களின் பிரதிநிதிகளாக சுழற்சி முறையில் மாநில அரசுகளும், தனி நபர் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் திருநங்கையர் நலனுக்காக செயல்பட்டுவரும் மதுரையைச் சேர்ந்த கோபிசங்கரும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.