DMK
குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ இறுதிச் சடங்கின்போது துயர் தாளாமல் கலங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த குடியாத்தம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடலுக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தியபிறகு, துயருற்று கண் கலங்கியுள்ளார்.
குடியாத்தம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன், உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இதையடுத்து அவரது உடல், சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு நேரில் சென்று, மாலை மணிவித்து அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றார்.
நேற்று சென்னை திருவொற்றியூரில் மறைந்த கே.பி.பி.சாமியின் உறுதி ஊர்வலத்தில் தொண்டர் திரளோடு பங்கேற்ற அவர், துயர் நிறைந்த முகத்தோடு காணப்பட்டார்.
அடுத்தடுத்து இரு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பெரிதும் துயருற்றுள்ளார். மிக எளிமையாக வாழ்ந்து, மக்கள் பணி செய்து மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், துக்கம் தாளாமல் கண்ணீர் சிந்தினார்.
இந்தக் காட்சி காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அங்கிருந்த சிலரும் தி.மு.க தலைவர் கலங்குவதைப் பார்த்து கண் கலங்கியுள்ளனர். இந்தக் காட்சி பத்திரிகை புகைப்படக்காரர்களின் கண்களில் சிக்கி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தலைவர் கலங்கியதால், தி.மு.க தொண்டர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Also Read
-
“வீடியோலாம் எடுக்க கூடாது...” - தேர்தல் அலுவலரை தடுத்த தஞ்சை பாஜக நிர்வாகி... அதிரடி காட்டிய போலீஸ்!
-
“நாங்கள் கொள்கையில் நீடித்து வருகிறோம்...” - CPIM மாநில செயலாளர் சண்முகம் அதிரடி!
-
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இது நடக்கும் : பா.ஜ.க அரசின் திட்டம் - ராகுல் காந்தி எச்சரிக்கை!
-
பா.ஜ.க ஆளும் அரியானாவில் 3 வயது சிறுமி வன்கொடுமை : உச்சநீதிமன்றம் தலையிட்ட பின் குற்றவாளிகள் கைது!
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!