DMK
"தி.மு.க குடும்பக் கட்சிதான்” : பொய் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கும் ‘பொய் பெட்டி’யின் 3வது அத்தியாயம்!
ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க-வும், பாசிச நடவடிக்கைகளால் மக்களை வதைக்கும் பா.ஜ.க-வும், அவர்களுக்கு எதிராகப் போராடும் தி.மு.க-வின் எதிர்வினைகளை மக்கள் மத்தியில் திசைதிருப்ப அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
பொய்களுக்கும், புரட்டுகளுக்கும் பெயர் போன எதிரிகளின் அவதூறுக் கணைகளைச் சுக்குநூறாக்க, ‘பொய் பெட்டி’ எனும் முயற்சியை முன்னெடுத்தது உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க இளைஞரணி.
பெரியார், அண்ணா, கலைஞர் காலம் முதல் தற்போது வரை தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்பப்பட்டு வரும் பொய்களை முறியடிக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வின் முதல் அழைப்பாளராக பத்திரிகையாளர் கோவி.லெனின் பங்கேற்றார்.
சமூக வலைதளங்களில் உலவும் பலரும், தி.மு.க-வினரும் எழுப்பிய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற ‘பொய் பெட்டி’ நிகழ்வில் பதிலளித்தார் கோவி.லெனின்.
தி.மு.க குடும்பக் கட்சி என காலங்காலமாகப் பரப்பப்பட்டு வரும் பொய் பிரச்சாரங்கள் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு உண்மை வரலாற்றின் வழியாக கோவி.லெனின் விளக்கங்களை வழங்கினார். அந்தக் காணொளி தி.மு.க இளைஞரணியின் யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
காணொளியை வெளியிட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தி.மு.க எனும் பேரியக்கம், ‘குடும்ப கட்சி’தான். ஆனால் இக்குடும்பம் அடிமைகளாலும், ஆதிக்கவாதிகளாலும் ஆனதில்லை. வழிநடத்தும் ‘அண்ணா’க்களாலும், உணர்ச்சிமிகு ‘உடன்பிறப்பு’களாலும், பேரன்புகொண்ட ‘தம்பி’மார்களாலும், பாசமிகு தாய்மார்களாலும் கட்டமைக்கப்பட்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!