DMK
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : தி.மு.க வேட்பாளரை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாங்குனேரி தொகுதி தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று வேட்பாளர்களுக்கான விருப்பமனு பெறப்பட்டது. விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க பொருளாளர் புகழேந்தி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராஜாராமன், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெய ரவிதுரை, முகையூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் உள்ளிட்ட 22 பேர் விருப்ப மனு கொடுத்தனர்.
உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று கவுதம சிகாமணி எம்.பி., விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்று வந்தது.
அதன்படி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளராக நா.புகழேந்தியை அறிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு விக்கிரவாண்டி தொகுதியில் நா.புகழேந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க பொருளாளராக பணியாற்றி வருகிறார். முன்னதாக தி.மு.க-வில் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளராக புகழேந்தி 3 முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!