DMK
“இந்தி திணிப்பை மத்திய அரசு எந்த வழியில் மேற்கொண்டாலும் தி.மு.க எதிர்த்து நிற்கும்” : கனிமொழி எம்.பி.,
சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் பகுதியில் தி.மு.க இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., ''பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடக்கூடிய விதமாக 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு, குழந்தைகளின் மனநிலையை அறியாமல் அவர்களுடைய எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய வகையில் தவறாக செயல்படுகிறது.
ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்று ஒற்றை பரிணாமத்திற்குள் கொண்டு வரக்கூடிய எந்த ஒரு முயற்சியும் வெற்றிபெறாது. இந்தி மொழி திணிப்பை திராவிட முன்னேற்ற கழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. மத்திய அரசு மீண்டும் இந்தி திணிப்பை எந்த வழியில் மேற்கொண்டாலும் அதை தி.மு.க எதிர்க்கும்'' எனத் தெரிவித்தார்.
பின்னர் இலங்கை பயணம் குறித்து பேசிய கனிமொழி, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுவது குறித்தும், இலங்கை மீன்வளத்துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். அதற்கு அவர்கள் இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
Also Read
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!
-
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்! : த.வெ.க மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு!