DMK
“சமயத் தமிழை சமத்துவத் தமிழாக மாற்றியது திராவிடம்” : ஆ.ராசா பேச்சு!
பேராசிரியர் மு.பி.பாலசுப்ரமணியன் எழுதிய ‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ என்கிற நூல் வெளியிட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, திருக்குறளில் எல்லா சமூகத்தில் உள்ள ஒழுங்குமுறைகளும் கூறப்பட்டுள்ளதால்தான் திராவிட இயக்கம் திருக்குறளை உயர்த்திப் பிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஆ.ராசா, “சங்கத் தமிழ் இலக்கியம் மாசுபட்ட இலக்கியமாகத்தான் காட்சியளித்துக் கொண்டு இருந்தது. மதமும், சாதியும் நஞ்சாகக் கலந்துகொண்டு இருந்தது. அதைத் தூய்மைப் படுத்தத்தான் திராவிட இயக்கம் உருவானது. சமயம் சார்ந்த மொழியை சமத்துவ மொழியாகக் கொண்டு வந்தது திராவிட இயக்கம் தான்.” எனக் குறிப்பிட்டார்.
Also Read
-
“இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! திராவிட மாடல் 2.O-ல் இது பன்மடங்காகும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மருத்துவப் படிப்பில் Sports Quota... MBBS, BDS இட ஒதுக்கீட்டை அதிகரித்து அரசு அனுமதி.. - விவரம் உள்ளே!
-
100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணை! : அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்!
-
“எப்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும்?” : தி.மு.க எம்.பி.க்கள் கேள்வி!
-
இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?