DMK
சேலத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு விழா : தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் முழு உருவச் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டது.
கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான கடந்த ஆக.,7ம் தேதி முரசொலி அலுவலகத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேலத்தில் தலைவர் கலைஞருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மேற்கு மாவட்டம் மற்றும் தாரமங்கலம் ஒன்றிய தி.மு.கவினர் சார்பில் தாரமங்கலம் தேர் நிலையம் அருகே கலைஞருக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான சிலைத் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார்.
Also Read
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!