DMK
சேலத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு விழா : தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் முழு உருவச் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டது.
கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான கடந்த ஆக.,7ம் தேதி முரசொலி அலுவலகத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேலத்தில் தலைவர் கலைஞருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மேற்கு மாவட்டம் மற்றும் தாரமங்கலம் ஒன்றிய தி.மு.கவினர் சார்பில் தாரமங்கலம் தேர் நிலையம் அருகே கலைஞருக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான சிலைத் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார்.
Also Read
-
பயணிகளுக்காக... 100 புதிய குளு குளு மின்சார AC BUS.. அதிநவீன சொகுசு BUS.. தொடங்கி வைத்தார் துணை முதல்வர்!
-
தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி... 3 மாவட்டங்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள்!
-
அரசுப் பள்ளிகளில் வகுப்பறை முதல் கழிவறைகள் வரை.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.145 கோடியில் தங்கும் விடுதி.. புதிய அடுக்குமாடி C வகை குடியிருப்பு.. திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
வேலூரில் அணை அமைக்கும் பணி முதல் பாலாறு அணைக்கட்டு வரை... பணிகளை அடுத்தடுத்து தொடங்கி வைத்த முதலமைச்சர்!