DMK
முரசொலியில் தலைவர் கலைஞர் சிலை : அறிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய தகவல்கள் !
முத்தமிழறிஞர் கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி முரசொலி அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவசிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சிறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைத் தாங்கினார்.
கலைஞரின் நினைவு நாளில் முரசொலி அலுவலகத்தில் அமர்ந்து கடிதம் எழுதும்ப் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள திருவுருவ சிலை பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
முத்தமிழறிஞர் கலைஞர் சிலை மேல் பகுதியில் இருந்து அடி பீடம் வரை 30 டன் எடைக் கொண்டதாகும்.
16 டன் எடை, 6 அடி உயரம் கொண்ட ஒரே கருப்பு கிரானைட் கல்லால் முப்பரிமாண தோற்றத்தில் அந்த பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விஸ்கான் ஒயிட் என்ற கிரானைட் கற்களைக் கொண்டு அலங்கார வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளனர்.
நீளம் 10 அடி, அகலம் 10 அடி, உயரம் 9 அடி என்ற அளவில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பீடம் வடிவமைப்புக்கான கிரானைட் கல் மைசூர் அருகே உள்ள சாம்ராஜ் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டது.
மேலும் இந்த பீடத்தை திருவண்ணாலையில் உள்ள அருணை கிரானைட் கம்பெனி வடிவமைத்துக் கொடுத்துள்ளது.
அமர்ந்த நிலையில் உள்ள கலைஞர் வெண்கல சிலையின் அகலம் 6.3 அடி, உயரம் 6.5 அடியாக உள்ளது.
இப்படியாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை திறந்து வைத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிலை திறப்பு விழாவுக்கு பிறகு மெரினாவில் அமைந்துள்ள தலைவர் கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி மரியாதை செய்தார்.
Also Read
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!