DMK
தூத்துக்குடி சம்பவம் குறித்து கேள்வியெழுப்பிய திருச்சி சிவா:அவையை ஒத்திவைத்த சபாநாயகர் !
மாநிலங்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது தி.மு.க உறுப்பினர் திருச்சி சிவா தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பினார்.
அவையில் இருந்த பிரதமர் நோக்கி இந்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி நேரம் முடிந்துவிட்டது எனக் கூறி அவையினை ஒத்தி வைத்தார். தூத்துக்குடியில் உயிரிழந்த பதிமூன்று உயிர்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் அவையை ஒத்திவைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
திமுக உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவையை ஒத்திவைப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முன், தென்சென்னை மக்களவை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் நாட்டில் முஸ்லீம் இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்படுவது குறித்து மக்களவையில் பேசிக்கொண்டிருந்த போது சபாநாயகர் ஓம் பிர்லா உணவு இடைவேளைக்குச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டு அவையைக் கலைத்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவச் சிலை... திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் பயிற்சி... எங்கு? எப்போது?
-
மாணாக்கர்களின் கல்விக்காக... அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள்.. - அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Epstein Files... மோடியால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நிலைமை என்ன? - புட்டு புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி!
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!