DMK
நீட், இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
சமூகநீதியையும், மாநில உரிமையையும் பாதிக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு, நீட் நுழைவுத்தேர்வு, இந்தி சமஸ்கிருதத் திணிப்பை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை எளிய - தாழ்த்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியரின் மருத்துவக் கனவை தகர்க்கும் வகையில், மத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட “நீட்” தேர்வு, +2 பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தின் முகப்பு அட்டையில் மகாகவி பாரதியாரின் தலைப்பாகையை காவி வண்ணத்தில் தமிழக அரசு அமைத்தது மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கை பரிந்துரையின் மூலம் பா.ஜ.க அரசு இந்தியை திணிக்க நினைப்பது ஆகியவற்றிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க மாணவரனி மாநில செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் டாக்டர். ரவீந்திரநாத், வழக்கறிஞர் அருள்மொழி, அனைந்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் தினேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கமிட்டு வருகின்றனர்.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!