DMK
50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் - செந்தில்பாலாஜி உறுதி !
தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி உள்பட மொத்தம் 63 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதி. அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது." இவ்வாறு கூறினார்.
Also Read
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
-
கொளத்தூர் : 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், திமுக-வுக்கு இது ‘மாநாடு மாதம்!’” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !
-
“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!