DMK

பலி வாங்கும் சாலைகள்; தமிழகத்தில் சாலை பராமரிப்பு தரம் தாழ்ந்தது ஏன்?- முரசொலி தலையங்கம் 

சாலைகளை முறையாக பராமரிக்காததும் அதிகபடியான விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் கூறியிருந்தது. சாலைகள் பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியும், அதனை சரிவர பயன்படுத்தாததே இதற்குக் காரணம். நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்படும் நிதி, நெஞ்சமில்லா வஞ்சகரின் பையை மட்டுமே நிரப்புகிறதே தவிர, அதனால் மக்களுக்கு ஒன்றும் பயனில்லை என்று கூறுகிறது முரசொலி தலையங்கம்.