Cinema
ரகளையில் ஈடுபட்ட ஜெயிலர் பட வில்லன் நடிகர் : அதிரடியாக கைது செய்த கேரள போலிஸ்!
தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் விநாயகம். இவர் மலையாளத்தில் 1995ம் ஆண்டு வெளிவந்த மாந்திரிகம் படத்தில் அறிமுகமானர். பின்னர் மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்குத் தமிழில் வெளிவந்த திமிரு படம் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.
இதையடுத்து மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் மற்றும் வில்லனாகவும் அசித்தி வருகிறார். அண்மையில் வெளிவந்து அனைவராலும் பாராட்டப்பட்ட ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற மிரட்டலான அவரது பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இவரது குடியிருப்பில் எழுந்த பிரச்சனை தொடர்பாக எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அப்போது போலிஸாரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரை கைது செய்தனர். பின்னர் நடிகர் விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!