Cinema
ரகளையில் ஈடுபட்ட ஜெயிலர் பட வில்லன் நடிகர் : அதிரடியாக கைது செய்த கேரள போலிஸ்!
தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் விநாயகம். இவர் மலையாளத்தில் 1995ம் ஆண்டு வெளிவந்த மாந்திரிகம் படத்தில் அறிமுகமானர். பின்னர் மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்குத் தமிழில் வெளிவந்த திமிரு படம் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.
இதையடுத்து மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் மற்றும் வில்லனாகவும் அசித்தி வருகிறார். அண்மையில் வெளிவந்து அனைவராலும் பாராட்டப்பட்ட ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற மிரட்டலான அவரது பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இவரது குடியிருப்பில் எழுந்த பிரச்சனை தொடர்பாக எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அப்போது போலிஸாரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரை கைது செய்தனர். பின்னர் நடிகர் விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
உக்ரைன் பொதுமக்களை படுகொலை செய்யும் ரஷ்யா : உக்ரைன் பகிரங்க குற்றச்சாட்டு !
-
அமெரிக்காவில் இரண்டே மாதத்தில் கட்டப்பட்ட சர்வதேச மைதானம் : பிரமாண்டமாக நடைபெறும் T20 உலகக்கோப்பை !
-
இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைகிறதாம் : ச்சே.. மோடிக்கு என்ன ஒரு கவலை!
-
இந்த 3 நாட்கள் ஊட்டிக்கு செல்ல வேண்டாம் : சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய தகவல் இதோ!
-
சூரிய காந்தப் புயல்களின் தரவுகளை சேகரித்த ஆதித்யா விண்கலம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்ன ?