Cinema
ரகளையில் ஈடுபட்ட ஜெயிலர் பட வில்லன் நடிகர் : அதிரடியாக கைது செய்த கேரள போலிஸ்!
தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் விநாயகம். இவர் மலையாளத்தில் 1995ம் ஆண்டு வெளிவந்த மாந்திரிகம் படத்தில் அறிமுகமானர். பின்னர் மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்குத் தமிழில் வெளிவந்த திமிரு படம் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.
இதையடுத்து மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் மற்றும் வில்லனாகவும் அசித்தி வருகிறார். அண்மையில் வெளிவந்து அனைவராலும் பாராட்டப்பட்ட ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற மிரட்டலான அவரது பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இவரது குடியிருப்பில் எழுந்த பிரச்சனை தொடர்பாக எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அப்போது போலிஸாரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரை கைது செய்தனர். பின்னர் நடிகர் விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
“பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் - இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” : தி.மு.க வலியுறுத்தல்!
-
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
-
கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!
-
வாக்களித்த மக்களை வேட்டையாடும் வழக்கத்தை பிரதமர் மோடி : பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு முரசொலி கண்டனம்!
-
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறை! : அலட்சியத்தின் உச்சத்தில் த.வெ.க அரசு!