Cinema

ரகளையில் ஈடுபட்ட ஜெயிலர் பட வில்லன் நடிகர் : அதிரடியாக கைது செய்த கேரள போலிஸ்!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் விநாயகம். இவர் மலையாளத்தில் 1995ம் ஆண்டு வெளிவந்த மாந்திரிகம் படத்தில் அறிமுகமானர். பின்னர் மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்குத் தமிழில் வெளிவந்த திமிரு படம் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.

இதையடுத்து மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் மற்றும் வில்லனாகவும் அசித்தி வருகிறார். அண்மையில் வெளிவந்து அனைவராலும் பாராட்டப்பட்ட ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற மிரட்டலான அவரது பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இவரது குடியிருப்பில் எழுந்த பிரச்சனை தொடர்பாக எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அப்போது போலிஸாரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரை கைது செய்தனர். பின்னர் நடிகர் விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Also Read: குடும்பம் தான் எல்லாமே : நடிப்பில் இருந்து ஓய்வு.. சென்னையில் இருக்க முடிவு செய்த ஆமீர் கான் !