Cinema
“என் உழைப்புக்கு கிடைத்த அளவற்ற அன்பை என்னால் நம்ப முடியவில்லை..” - நடிகை தமன்னா நெகிழ்ச்சி!
விஜயின் 'பீஸ்ட்' படத்துக்கு பிறகு இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தமன்னா, ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு திரைபட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் முதல் பாடலான 'காவாலா..' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் தமன்னா நடமாடியுள்ளார்.
அருண்ராஜா காமராஜ் லிரிக்கில், அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை பிரபல பாடகி ஷில்பா ராவ், அனிருத் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது பெரும் வைரலாகி வரும் நிலையில், திரை பிரபலங்கள் என பலரும் ரீல்ஸ் செய்து வெளியிடுகின்றனர். மேலும் இந்த பாடலுக்கு சிம்ரன், காஜல் உள்ளிட்டோர் நடமாடுவது போல் AI உருவாக்கமும் இணையத்தில் வைரலாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு தற்போது வைப் செய்து வரும் சூழலில், பாடலுக்காக நடிகை தமன்னா தற்போது நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "காவாலா பாடலுக்கு கிடைத்த அளவற்ற அன்பை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அன்பை பார்த்து மகிழ்கிறேன். எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாடலான "Hukum tiger ka hukum.." என்ற பாடல் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு காரணமாக சிவகார்த்திகேயனின் 'அயலான்', ஷாருக்கின் 'ஜவான்' உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
RGNIYD நிறுவனத்தில் RSS தலைமையைக் கொண்டுவர சூழ்ச்சி : விடுதலை நாளேடு எச்சரிக்கை!
-
”ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கும்” : ராகுல் காந்தி அதிரடி!
-
”பா.ஜ.க.வின் தோல்வி தவிர்க்க முடியாதது” : காரணத்தை பட்டியலிட்ட அகிலேஷ்!
-
”காங்கிரஸ் வென்றால் இந்துக்களுக்கு என்று ஒரு நாடே இருக்காது” : மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் பாஜக!
-
அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு !