Cinema
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ரோஜா.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !
தமிழில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் ரோஜா. ஆந்திராவை சேர்ந்த இவர், தமிழில் செம்பருத்தியில் தொடங்கிய இவரது திரைப்பயணம், அப்போதுள்ள முக்கிய முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்து வந்தார்.
தொடர்ந்து டிவி சீரியல்களிலும் நடித்து வந்த இவர், திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்தார். இதனிடையே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 2004, 2009-ல் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டார். அதில் தோற்ற இவர், அடுத்ததாக YSRCP கட்சியில் சேர்ந்து 2014 தேர்தலில் வெற்றி பெற்றார்.
பின்னர் 2019-ல் நடைபெற்ற அம்மாநில தேர்தலில் YSRCP கட்சி வெற்றிபெற்று ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது, ஜென்மோகன் ரெட்டியின் அமைச்சரவை இரண்டு ஆண்டுகளில் மாற்றி அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரோஜா உட்பட புதிதாக 25 பேர் அமைச்சர் பதவிகாலை ஏற்றுக் கொண்டனர். அதில் நடிகை ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டது.
தற்போது அமைச்சராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் இவர், அண்மைக்காலமாக கால் வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த சூழலில் இவருக்கு கால் வலி அதிகமானதால் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கால் வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் ரோஜா விரைந்து குணமாக ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்தை விமர்சையாக பாராட்டினார். இதில் கோபம் கொண்ட ரோஜா, ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்தார். இதனால் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அம்மோனியா வாயுக் கசிவு: “எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது” - உதயநிதி வலியுறுத்தல்!
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!