Cinema
Fashion Show-வுக்கு தயாராக இருக்கும் சன்னி லியோன்.. திடீரென்று வெடித்த வெடிகுண்டு.. ரசிகர்கள் அதிர்ச்சி !
இந்திய திரையுலகில் நீங்கா இடம்பிடித்தவர் சன்னி லியோன். இந்தி மொழிகளில் தொடங்கிய இவரது திரைப்பயணம், தமிழிலும் தொடர்ந்துள்ளது. தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான 'வடகறி' படத்தில் ஒரு பாடல் ஒன்றிற்கு நடனமாடினார்.
அதன்பிறகு தமிழில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 'ஓ மை கோஸ்ட்' படத்தில் பேயாக நடித்து ரசிகர்கள் மனதை மேலும் கவர்ந்தார். முன்னிலை கதாபாத்திரத்திலும் நடித்து வரும் இவர், சொந்தமாக பியூட்டி பொருட்கள் விற்கும் தொழிலும் செய்து வருகிறார். மேலும் மாடலாகவும் இருந்து வரும் இவர், அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
அதன்படி நடிகை சன்னி லியோன் மணிப்பூரில் உள்ள இம்பாலில் நாளை நடைபெறும் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாளை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக அதற்கான அரங்கு அமைக்கும் பணிகள் இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகை சன்னி லியோன் கலந்துகொள்ள இருக்கும் ஃபேஷன் ஷோ நடைபெறும் பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் திடீரென குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் வந்து சோதனை செய்தபோது, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரியவந்தது. அதோடு இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கையெறி குண்டு எறிந்துள்ளது தெரியவந்துள்ளது. சன்னி லியோன் பங்கேற்கவிருக்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே குண்டு வெடிப்பு நடத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!