Cinema
'எப்போதும் வலிமையாக இருப்பேன்': உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த 'பேச்சுலர்' பட நடிகை!
2021ம் ஆண்டு வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இந்த பட வெற்றியை அடுத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்படங்கள் அவ்வப்போது வைரலாகும்.
அப்போது எல்லாம் அவரது உடல் குறித்த பலரும் கேலியாகப் பதிவிடுவர். இதைக் கண்டும் காணாமல் இருந்து வந்த நிலையில் தற்போது, தனது உடல் கேலி செய்தவர்களுக்கு நடிகை திவ்யபாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில், " என் உடல் வடிவம் போலியானது, இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என சிலர் கூறுகின்றனர். மேலும் பேண்டா பாட்டில் போன்று இருக்கிறேன் எனவும் கிண்டல் செய்கின்றனர்.
இப்படியான கேலி கிண்டல்களை நான் எனது கல்லூரி காலத்திலிருந்தே சந்தித்து வருகிறேன். அப்போது எல்லாம் என் உடலையே நான் வெறுக்க நினைத்தேன். இயற்கையாகவே என் உடல் அமைப்பு இப்படிதான் உள்ளது. நான் உடற்பயிற்சி கூட செய்து கிடையாது. சக பெண்களே நாம் எப்போதும் வலிமையாக அன்பாகவே இருப்போம்" என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இவருக்கு சக பெண் நடிகர்கள் ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாகவே பெண் நடிகர்கள் மீது உருவக் கேலி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!