Cinema
குடும்பத்துடன் புத்த மதத்தை தழுவிய பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா.. - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா தனது குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் சாய் தீனா. மெயின் வில்லனாக இவர் நடிகராக இல்லாமல் இருந்தாலும், வில்லனுக்கு வலது கை என்கிற முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருப்பார். கடந்த 2004-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான 'விருமாண்டி' திரைப்படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து அறிமுகமானவர் நடிகர் தீனா.
அப்போது இவர் முக்கிய ரோலில் நடித்து மற்ற இயக்குநர்கள் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னும் இவருக்கு நெகட்டிவ் ரோலே கிடைத்துள்ளது. தமிழில் எந்திரன், மாநகரம், தெறி, மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர் என பல முன்னணி படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.
திரை நடிப்பில் வில்லனாக அறியப்படும் இவர், தனது நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோ என்று ரசிகர்கள் பலராலும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். இவரது பேச்சுக்கே தனி ரசிகர்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின்போது கூட நடிகர் தீனா தன்னால் முடிந்த அளவு பொதுமக்களுக்கு உதவிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது தீனா தான் இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறியுள்ளார். இவர் மட்டுமில்லாமல், இவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளும் சேர்ந்து பிக்கு மௌரியா முன்னிலையில் 22 உறுதி மொழிகள் ஏற்று புத்த மதத்திற்கு மாறியுள்ளார். இவர்களுடன் புத்த துறவி ஒருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அவர் திடீரென்று புத்த மதத்திற்கு மாறியது தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பி வருகிறது. இதற்கான விளக்கத்தை அவர் விரைவில் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!